இலங்கை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி விலகினார்

இலங்கை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிலிருந்து விலகுவதாக பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P.S.M Charles) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) கடிதம் அனுப்பியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.